மதுரை: சிவகங்கை, மானாமதுரை போலீசாரின் காவலில் இருந்தபோது மரணமடைந்த ஆகாஷின் உடலை இன்று மாலை 5 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தவறினால் நாளை காவல்துறையே உடலை அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும்; தற்போது வரை, உடலை பெறாமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல; உரிய மரியாதை செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
