சென்னை: கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்து 3 வயது குழந்தை கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கி உள்ளது. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. அநாகரீகமான, கொடூரமான குற்றச்செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
