திருவனந்தபுரம்: கேரளாவில் அரசுப்பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை முதலமைச்சர் வி.டி.சதீசன் எர்ணாகுளத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சாதாரண பேருந்துகளில் மட்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ள இத்திட்டத்தில் பெண்களுடன் சேர்ந்து திருநங்கைகளும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
