×

காயல்பட்டினத்தில் ரத்த தான முகாம்

 

தூத்துக்குடி, ஜூன் 15: உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு காயல்பட்டினத்தில் நடந்த முகாமில் தவெகவினர் ரத்த தானம் வழங்கினர். உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு காயல்பட்டினத்தில் மெகா அமைப்பு சார்பில் 47வது ரத்த தான முகாம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜெ.முருகன் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். இதில் தவெகவினர் உள்ளிட்ட 29 பேர் ரத்த தானம் வழங்கினர். நிகழ்ச்சியில் மெகா அமைப்பு இணை செயலாளர் புஹாரி, செயற்குழு உறுப்பினர் முஜாய்தலி, ஜபருல்லா, ஹாமுன்ரசீது, ஷேக்காலி, தவெக மாவட்ட இணைச்செயலாளர் விஜய் ஆனந்த், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் அகரம் ராஜ்குமார், பழக்கடை திருப்பதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணராஜன், மெய்தீன் அப்துல் காதர், நகர செயலாளர் ஹனிபா ஹசன், மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் அசாருதீன், நகர பொருளாளர் ஐயப்பன், நகர இளைஞரணி செயலாளர் பிரபாகரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் குட்டிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்

 

Tags : Kayalpattinam ,Thoothukudi ,World Blood Donor Day ,World Blood Donor Day.… ,
× RELATED ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி சமையல் கூடத்தில் தீ விபத்து