- காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்
- புதியபுத்தூர்
- ஓட்டப்பிடாரம்
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ்
- ஒட்டப்பிடாரம் சென்ட்ரல் சர்க்கிள்
- வட்டம்
- ஜனாதிபதி
- ஜேம்ஸ் லாரன்ஸ்
- வடக்கு மாவட்டம்
- ஜனாதிபதி...
ஓட்டப்பிடாரம், ஜூன் 15: புதியம்புத்தூரில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் மத்திய வட்டாரம் சார்பில் நடந்த இக்கூட்டத்தில் வட்டார தலைவர் ஜேம்ஸ் லாரன்ஸ் வரவேற்றார். வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்து நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் உள்ளவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் வேலாயுதசாமி, பெத்துராஜ், கோவில்பட்டி வட்டார தலைவர் ரமேஷ் மூர்த்தி, புதியம்புத்தூர் நகர தலைவர் அருண் பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி, நகர முன்னாள் தலைவர் அர்ச்சுணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட முன்னாள் துணை தலைவர் தங்கச்சாமி, மாவட்ட செயலாளர் மகேஷ், மகளிரணி தனலட்சுமி, வழக்கறிஞர் அய்யலுசாமி, இளைஞரணி தலைவர் ஜான் பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர தலைவர் துரைமணி நன்றி கூறினார்.
