ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்

புதுடெல்லி: ஜெனரல் உபேந்திர திவேதி இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக கடந்த 2024ம் ஆண்டு பதவி ஏற்றார். இவரது பணிக்காலம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ராணுவ தலைமை தளபதியை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. அதன்படி தற்போது ராணுவ துணை தலைமை தளபதியாக பதவி வகித்து வரும் லென்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் புதிய ராணுவ தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 30ம் தேதி தீரஜ் சேத் பதவி ஏற்க உள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத், மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர். இவர் கடந்த 1986ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கவச படையில் அதிகாரியாக சேர்ந்தார். நாற்பது ஆண்டுகளாக அவரது நீடித்த, சிறப்பான ராணுவ பணிகளின் செயல்திறன், மேம்பாடு மற்றும் நிறுவன ரீதியான துறைகளில் பரந்த பணி அனுபவங்களை பெற்றுள்ளார்.

மேலும், ராணுவத்தின் போர்த்திறன், நீண்டகால மாற்றங்களுக்கு வேண்டிய பங்களிப்பை அளித்துள்ளார். குறிப்பாக பாலைவன பகுதியில் கவசப்படை பிரிவுக்கும், ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சி எதிர்ப்பு படை பிரிவுக்கும் தலைமை தாங்கி உள்ளார். லெப்டினன்ட் ஜெனரலாக இந்திய ராணுவத்தின் முதன்மையான தாக்குதல் படை பிரிவுகளில் ஒன்றான சுதர்சன் சக்ரா படை பிரிவுக்கு தலைமை தாங்கியுள்ள ஜெனரல் தீரஜ் சேத், பின்னர் டெல்லி பகுதிகளுக்கான தளபதியாகவும் பணியாற்றி உள்ளார்.

Related Stories: