×

நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் ஏஜென்ட்கள் அதிகரிப்பு: மல்லிகார்ஜூன கார்கே தாக்கு

பெங்களூரு: மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜூன கார்கே நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் ஏஜென்ட்கள் அதிகரித்து வருகிறார்கள் என கூறினார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய பட்டதற்கான சான்றிதழை பெங்களூருவில் தேர்தல் அதிகாரியிடம் இருந்து நேற்று பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது: 13வது முறையாக மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

இது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியல் வாழ்க்கையில் எனக்கு தொடர்ச்சியாக இந்த வாய்ப்பை காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளது. இந்திரா காந்தி மட்டுமின்றி சோனியா காந்தியும் எனக்கு இந்த வாய்ப்பை அளித்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களை கட்டுப்படுத்துவது யார்? அதே நேரம் ஜார்க்கண்ட் மற்றும் மத்திய பிரதேசத்தில் யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம். மீனாட்சி நடராஜன் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இது தவறான முடிவாகும். இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். தற்போது நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஏஜெண்ட்டுகள் அதிகரித்து உள்ளனர். மீனாட்சி நடராஜன் வேட்பு மனு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சில யோசனை கூறியுள்ளது.

அதன்படி நாங்கள் இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். மத்தியப் பிரதேசத்தில் சட்டத்தின்படி ஆட்சி நடக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மக்களாட்சி கொலை செய்யப்படுகிறது. மக்கள் பிரதிநிதியாக தேர்ந்து எடுக்கப்பட்டு அதற்கான வெற்றி சான்றிதழ் பெறுவது இதுவே கடைசி முறையாக இருக்கலாம்’ என்றார்.

Tags : RSS ,Mallikarjun Kharge ,Bengaluru ,Rajya Sabha ,Congress ,president ,
× RELATED அளவிற்கு மேல் நச்சுத் தன்மை வாய்ந்த...