×

3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்

 

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க கடந்த 10ம் தேதி டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய் 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். தமிழக முதல்வர் விஜய் 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லி பயணத்தை இன்று 12ம் தேதி முடிக்கும் முதல்வர் விஜய் அங்கிருந்த நேரடியாக கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்த முதல்வர், கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தார். பின்னர் கோவிலுக்கு 1 கிலோ 600 கிராம் எடையுள்ள 2.5 அடி நீள வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார்.

தொடர்ந்து காரில் பெங்களூரு விமானம் நிலையம் சென்ற முதல்வர் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவரை வரவேற்க ரசிகர்கள், தொண்டர்கள் திரண்டனர். முன்னதாக, முதல்வர் விஜயின் வருகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், மேகதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கருப்புக்கொடி காட்ட முயன்ற 20-க்கும் மேற்பட்டோரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Tags : Vijay ,Chennai ,Chief Minister ,Delhi ,Niti Aayog ,Tamil Nadu ,
× RELATED காலி மதுபாட்டிலுக்கு ரூ. 10 தரக்கோரி...