சென்னை: பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளுக்கு தடையற்ற 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்; பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; அறிவிக்கப்படாத மின்வெட்டால் பயிர்களுக்கு உரிய நேரத்தில் நீர் பாய்ச்ச முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
