×

அமெரிக்க வங்கியில் ரூ.956 கோடி மோசடி இந்திய வம்சாவளி தொழிலதிபர் கைது

வாஷிங்டன்: அமெரிக்க வங்கியில் ரூ.956 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தரக் குடியுரிமை பெற்றவர் மகேந்தர் மகிஜானி(44). கலிபோர்னியாவின் கொரோனா டெல் மாரில் வசிக்கும் மகேந்தர் மகிஜானி நியூபோர்ட் பீச்சைத் தளமாகக் கொண்ட கேன்டர் குரூப் விஎல்எல்சி என்ற நிறுவனத்தை நடத்தினார்.

காப்பீட்டு பாலிசிகளின் உரிமைப் பத்திரப் பதிவுகளைத் திருத்தி, வெஸ்டர்ன் அலையன்ஸ் பேன்கார்ப் வங்கியை ஏமாற்றி ரூ.956 கோடி மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மகிஜானிக்கு சொந்தமான ‘கேண்டர் குரூப் விஎல்எல்சி நிறுவனம், சம்பந்தப்பட்ட வங்கியுடன் கடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, நிலங்களை அடிப்படையாகக் கொண்ட கடன்களை உருவாக்க அல்லது வாங்க, வங்கி சுமார் ரூ.956 கோடியை கேண்டர் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

கடன் வருவாயிலிருந்து வங்கிக்கான தொகையைத் திருப்பிசெலுத்தாமல் மகிஜானி போலியான உரிமை காப்பீட்டுப் பத்திரங்களைத் தயாரித்து, வங்கியை ஏமாற்றியுள்ளார். இதையடுத்து மகேந்தர் மகிஜானி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

* போதை பொருள் விருந்து
மேலும் தொழிலதிபர் மகிஜானி போதை பொருள் மற்றும் பெண்களை வைத்து தனிப்பட்ட விருந்துகளை நடத்தியுள்ளார். இதில் சில வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டுள்ள நிலையில், அந்த வீடியோக்களை வைத்து அவர்களை மிரட்டி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதை தவிர தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களை அவர் கொலை மிரட்டல் விடுத்தார் என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளும் அவர் மீது கூறப்பட்டுள்ளது.

Tags : US ,Washington ,Mahender Makijani ,United States ,Corona Del Mar, California ,Newport Beach… ,
× RELATED நேபாளத்தில் மலைப்பாதையில் பள்ளத்தில்...