×

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈரானின் உயர்மட்ட தலைமை ஒப்புக் கொண்டதாக டிரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக பதற்றம் நிலவி வந்தது. குறிப்பாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதும், ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக கூறி அந்நாட்டின் மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்தார்.

இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் அதி உயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதோடு நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய அரசியல் ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்டார்கள்.

இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படை வளைகுடா நாடுகளில் இருந்த அமெரிக்க ராணுவ தளங்கள் மீது கடுமையான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது. அதோடு முக்கிய கச்சா எண்ணெய் வர்த்தக தடமான ஹார்மோன்ஸ் நீரிணையையும் ஈரான் மூடியது. இந்த சூழலில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் சமீபத்தில் அமெரிக்க ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் இந்த போர் மீண்டும் தொடங்கியது.

இரு தரப்பும் மாறி மாறி தாக்கி கொண்ட சூழலில் ஹார்மோஸ் நீரிணையை மீண்டும் முடிவதாக ஈரான் அறிவித்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப ஈரான் போர் முடிவடைவதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈரானின் உயர்மட்ட தலைமை ஒப்பு கொண்டுள்ளதாக டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்னும் ஒரு வரத்திற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அது வரை ஈரானின் துறைமுகங்களில் இருந்து எந்த ஒரு கப்பலும் வெளியேற முடியாத வகையில் அமெரிக்க படைகள் முற்றுகையிடும் என்று கூறியிருக்கிறார். இதனால் ஈரான் அமெரிக்க போர் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Trump ,Iran ,Washington ,United States ,Donald Trump ,US ,
× RELATED 4 ஆண்டுகள் கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்..!!