சென்னை: புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவால் மிகுந்த துயரமடைந்தேன் என ஆளுநர் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். கிராமிய வாழ்வையும் மனித உணர்வுகளையும் உண்மைத் தன்மையுடன் வெளிப்படுத்தியது அவரது படைப்புகள். பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்தார்.
