பிலிப்பைன்ஸ், மிண்டனாவோ தீவு நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: பிலிப்பைன்ஸ், மிண்டனாவோ தீவு நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “பிலிப்பைன்ஸ், மிண்டனாவோ தீவு நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். துயரமான நேரத்தில் பிலிப்பைன்ஸ் மக்களுடன் இந்தியா துணைநிற்கும். இந்தியாவின் முழு ஆதரவு இருக்கும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ மாகாணத்தில் கடலோரப் பகுதியில் நேற்று காலை 7:37 மணியளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.8 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. பயங்கர நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

நிலநடுக்கத்தின் காரணமாக பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதேபோல் டாவோவ் ஓரியண்டல் மாகாணத்தில் வணிக வளாகங்கள், அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கடுமையாகக் குலுங்கின. இங்கு ஒருவர் உயிரிழந்தார். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ், மிண்டனாவோ தீவு நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “பிலிப்பைன்ஸின் மிண்டனாவோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளதை அறிந்து ஆழ்ந்த வருத்தமடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுடனும் அரசாங்கத்துடனும் இந்தியா என்றும் துணையாக நிற்கும்” என பதிவிட்டுள்ளார்.

 

Related Stories: