ஹோர்முஸ் நீரிணை அடைக்கப்பட்டும் கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருப்பது எப்படி!! பின்னணியில் உள்ள 2 முக்கிய நாடுகள்

தெஹ்ரான்: ஈரான் மீதான போர் தொடங்கியதில் இருந்து உலகநாடுகளின் பொருளாதாரம் பெரும் பாதிப்புகளை சந்தித்து வந்தாலும் கூட, கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பெரும்பாலும் 100 டாலருக்குளேயே நீடிக்கிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய பாதையாக திகழும் ஹோர்முஸ் நீரிணை, முழுமையாக அடைக்கப்பட்டு தற்போது 3 மாதங்களுக்கு மேலாகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து நாளொன்றுக்கு வரும் சுமார் 1 கோடி பீப்பாய் எண்ணெய் விநியோகம் முற்றிலும் நின்று போனதால், இதுவரை இல்லாத அளவு வரலாற்றில் மிக மோசமான அளவில் விநியோக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடிக்கு மத்தியில் துவக்கத்தில் 1 பேரல் கச்சா எண்ணெய் விலை 200 முதல் 300 டாலர் வரை அதிகரிக்க கூடும் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். ஆனால் தற்போதைய நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழாக, அதாவது 96 டாலர் என்ற அளவில் நீடித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

விலை உயராததற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதற்கு 2 முக்கிய காரணங்கள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். முதலாவதாக உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான சீனாவின் தேவை எதிர்பாராவிதமாக கடுமையாக குறைந்துள்ளது. சீனா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியை சுமார் 40 சதவீதம் வரை குறைத்துள்ளதால், சந்தையில் விநியோக சுமை குறைந்துள்ளது.

இரண்டாவது காரணம், அமெரிக்க தனது வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிரடியாக அதிகரித்து முக்கிய விநியோகஸ்தராக மாறி உள்ளது. பல்வேறு நாடுகள் தங்களின் அவசரகால இருப்பு எண்ணையை பயன்படுத்தி வருவதால், தற்காலிகமாக கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் உள்ளது. வாரந்தோறும் 7 முதல் 8 கோடி பீப்பாய் என்ற அளவில் உலகளாவிய கச்சா எண்ணெய் இருப்பு குறைந்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

Related Stories: