×

சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடுபோன விவகாரத்தில் 35 ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல்

சென்னை: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்துறை சார்ந்த ஆய்வில் ஈடுபட்டார். அப்பொழுது கடந்த மாதம் மே 16, 17 ஆகிய தேதிகளில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் குறைவான ஊழியர்கள் இருந்த சமயத்தில் சுமார் 10 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. அந்த ஹார்டு டிஸ்க்குகளில் நிலக்கரி கொள்முதல் டெண்டர் தொடர்பான தகவல்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டது.

சென்னை அண்ணாசாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடுபோன விவகாரத்தில் மொத்தம் தற்போது 35 ஹார்டு டிஸ்க்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மின்வாரிய அலுவலகத்தில் கம்ப்யூட்டர்களை பராமரிக்கும் தனியார் நிறுவன பணியாளர் கோபிநாத் என்பவரை கைது செய்து நேற்று முதல் போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.

போலீசாரின் விசாரணையில் ஹார்டு டிஸ்க்குகளை பெங்களூருவில் உள்ள கடையில் விற்றதை கைதான கோபிநாத் ஒப்புக்கொண்டார். பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார், கடையில் இருந்து 35 ஹார்டு டிஸ்க்குகளை பறிமுதல் செய்தனர். ஆனால் புகாரில் 18 ஹார்டு டிஸ்க் திருடியநிலையில் எஞ்சிய 17 ஹார்டு டிஸ்க்கை எங்கே திருடினார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : ELEKRAYA ,CHENNAI ,Tamil ,Nirmala Kumar ,Minister ,
× RELATED உலக சுற்றுச்சூழல் தினம்: தமிழகம்...