×

திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை, கலெக்டர் கவிதா ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். திருவள்ளுர் – ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை வேடங்கிநல்லூர் பகுதியில், நெடுஞ்சாலைகள் துறை சார்பில் 13.5 கி.மீ நீளத்திற்கு ரூ.70 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் சாலை விரிவாக்க பணிகளை, மாவட்ட கலெக்டர் கவிதா நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, ஊத்துக்கோட்டை வட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் கீழ் இயங்கும் கட்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அண்ணா அரசு மருத்துவமனையிலும் கலெக்டர் கவிதா திடீர் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.

மேலும், பேரூராட்சிகள் துறை சார்பில் ரூ.3.59 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மார்க்கெட் கடைகளின் கட்டுமான பணிகள் மற்றும் காட்டுப்பள்ளி – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் நடைப்பெற்று வரும் சாலைப் பணிகளை ஆய்வு செய்து, அப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதேபோல் திருவள்ளூர் வட்டம், வேடங்கிநல்லூர் பகுதியில் நகராட்சி நிர்வாக துறை சார்பில், ரூ.33 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தின் இறுதிகட்ட பணிகளை கலெக்டர் கவிதா ஆய்வு செய்து, பணிகள் குறித்து விபரங்களை கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் சிற்றரசு, உதவி செயற்பொறியாளர் மதியழகன், உதவி பொறியாளர் அரவிந்தன், வட்டார மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், ஆரம்ப சுகாதார மருத்துவர் இந்திரா, திருவள்ளுர் நகராட்சி ஆணையர் ந.தாமோதரன், உதவி இயக்குநர் (நில அளவை) பேச்சியப்பன், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) வெங்கடேஷ், துணை ஆட்சியர் (பயிற்சி) சண்முக ப்ரீதா, ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராஜேஷ், நகராட்சி பொறியாளர் சரோஜா, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அலுவலர்கள மற்றும் பொறியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்ட
னர்.

Tags : Tiruvallur ,Kavitha ,Tiruvallur district ,Vedanginallur ,Tiruvallur-Uthukkottai highway ,Highways Department… ,
× RELATED நெல்லையில் டாஸ்மாக் பாரில் ஒருவர் கொலை: ஒருவர் கைது