அமராவதி அமைச்சரவை கூட்டத்தில் பவன்கல்யாணுக்கு திடீர் உடல்நலக்குறைவு

திருமலை: ஆந்திர மாநிலம் அமராவதியில் நேற்று காலை அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் சக அமைச்சர்களுடன் கலந்துகொண்டார். அப்போது பவன்கல்யாணுக்கு திடீரென கடுமையான முதுகுவலி மற்றும் அதீத சோர்வு காரணமாக கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார். கடந்த ஏப்ரல் மாதம் ஐதராபாத்தில் அவருக்கு எண்டோஸ்கோபிக் சைனஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவர் மீண்டும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: