தேவையானவை:
*மணத்தக்காளி கீரை – 2 கைப்பிடி
*வரமிளகாய் – 4
*சின்ன வெங்காயம் – 10
*பூண்டு பற்கள் – 10
*உப்பு
*நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
மணத்தக்காளிக் கீரையை ஆய்ந்து சுத்தப்படுத்தி வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் லேசாக வதக்கிக் கொள்ளவும். சூடு ஆறியதும் மணத்தக்காளி கீரையுடன் வரமிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், தேவையான உப்பு கலந்து மிக்ஸி ஜாரில் நைசாக அரைக்கவும்.இது வயிற்றுப் புண்களை சரி செய்யும் மிக அற்புதமான துவையல். வாரம் இருமுறை பயன்படுத்தினால் வயிற்றுப் புண்களுக்கு குட்பை சொல்லலாம்.
