×

3 வயது குழந்தைக்கு தொல்லை போக்சோவில் தந்தை கைது

வாடிப்பட்டி, ஜூன் 4: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 34 வயது விறகு வெட்டும் தொழிலாளிக்கு இரண்டு மகன்களும், 3 வயது மகளும் உள்ளனர். குடிபோதையில் இருந்த அந்த நபர் மகள் என்றும், குழந்தை என்றும் கருதாமல் அந்த குழந்தைக்கு பாலியல் ரீதியிலான தொல்லைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த குழந்தையின் தாய் ஆத்திரமடைந்து, சம்பவம் குறித்து காடுபட்டி போலீசில்புகார் அளித்தார். அதன் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து போதை நபரை நேற்றுமாலை கைது செய்தனர்.

 

Tags : Vadipatti ,Cholavandan ,Madurai district ,
× RELATED மின் குறைதீர் கூட்டம்