மதுரை, ஜூன் 4: கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் – கோவை அதிவேக ரயிலில் பயணம் செய்த சிவசங்கரி (46) என்பவரின் கைப்பையை மர்மநபர் ஒருவர் திருடிச்சென்றார். இதுகுறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இந்த திருட்டில் ஈடுபட்ட மதுரை, பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த குமார் (37) என்பவரை கைது செய்தனர். கைப்பை மற்றும் அதிலிருந்த 3 செல்போன்கள், ஒரு ஜோடி வெள்ளி வளையல்கள் மீட்கப்பட்டன.
