திருச்சி மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு

திருச்சி,மே28: திருச்சி மாவட்டத்தில் 114 வது புதிய எஸ்பியாக டோங்கரே பிரவீன் உமேஷ் ஐபிஎஸ் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவர் மகாராஷ்ரா மாநிலம் அகமத் நகரைச் சேர்ந்தவர். தமிழ்நாடு பிரிவைச்சேர்ந்த 2016ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர் 2015- 2016ம் ஆண்டில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யூபிஎஸ்சி) குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றார். சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் தனது முறையான அடிப்படைப் பயிற்சியை பயின்றார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) பணியாற்றினார். மேலும் 2020ம் ஆண்டு தமிழக ஆளுநரின் துணை ஆணையராக பணியாற்றினார். தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் முக்கிய காவல் பதவிகளை வகித்துள்ளார். மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் இயக்குநரகம் சென்னையில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது திருச்சி மாவட்டத்தின் 114வது மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்றுள்ளார்.

 

Related Stories: