கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

*பூசணிப் பூக்களின் இதழ்களை தனியாக எடுத்து வைக்கவும். பஜ்ஜி மாவு கலவையில் ஒவ்வொரு இதழாக தோய்த்து, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான பஜ்ஜி தயார்.

*ஸ்ட்ராபெர்ரியை அரைத்து கூழாக்கவும். அதனுடன் ஆரஞ்சு ஜூஸ், சர்க்கரை மற்றும் உப்பு, தேவையான தண்ணீர் கலந்து ஸ்ட்ராபெர்ரி கூலர் தயார் செய்து பரிமாற அனைவரும் மகிழ்வார்கள்.

*கொத்தமல்லித் தழையுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து, உப்பு, சீரகத் தூள், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசைந்து, பூரிகளாக பொரிக்கலாம்.

*ரசம் தயார் செய்யும் போது பீட்ரூட் சாறு ஒரு கப் சேர்த்தால், சத்து நிறைந்த ரசம் தயார்.

– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

*தயிருக்கு வைக்கும் பாலில் ஊற்ற உறை மோர் இல்லையா? இரண்டு மூன்று பச்சை மிளகாயை எடுத்து காம்புகளை கிள்ளிப் போடுங்கள். காலையில் கெட்டியான தயிர் ரெடி.

*பஜ்ஜி செய்யும் போது அரைக்கீரையை பொடியாக நறுக்கி போட பஜ்ஜி புதுவித சுவையுடன் இருக்கும்.

*சமையலுக்கு பருப்பை பயன்படுத்தும்போது கூட ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை போட, வாய்வுத் தொல்லையை போக்கும்.

*கீர் செய்யும் போது சேமியாவிற்கு பதிலாக துருவிய கேரட் அல்லது துருவிய சிவப்பு பூசணிக்காயை பயன்படுத்தலாம்.

– கே.எல்.புனிதவதி, கோவை.

*சோயா பீன்ஸை ஊறவைத்து உளுந்து மாவுடன் சேர்த்து அரைத்து, இட்லி வார்க்க, சாஃப்ட்டான சுவையான இட்லி நன்றாக இருக்கும்.

*ஜவ்வரிசியை வறுத்துப் பொடி செய்து அடை, வடை, தோசை சுடும்போது அந்த மாவை 1 டீஸ்பூன் சேர்த்து செய்ய கரகரப்பான டேஸ்ட்டியான தோசை தயார்.

*தக்காளி சட்னி செய்யும் போது எள் அல்லது வேர்க்கடலையை வறுத்து கரகரப்பாக அரைத்து செய்ய சுவையாக இருக்கும்.

*பழங்களில் ஸ்மூத்தி, சாலட் செய்யும் போது கொஞ்சம் ஜாம் சேர்த்துக் கொள்ள, கலரும் சுவையும் நன்றாக இருக்கும்.

– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

*பஜ்ஜி செய்ய மாவு தயாரிக்கும் போது கடலை மாவுக்கு பதிலாக, அரைத்த பச்சைப் பயறு மாவில் சிறிதளவு அரிசி மாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் ருசியாகவும், உடலுக்கு கூடுதல் சத்தும் கிடைக்கும்.

*வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக் பேப்பரால் சுற்றி வைத்தால் நான்கு நாட்கள் வரை கருக்காமல் அப்படியே இருக்கும்.

*தோசை சுடும் போது தோசை மாவில் சிறிதளவு சர்க்கரையை போட்டு கலந்து தோசை சுட்டால் மொறுமொறுவென்று இருக்கும்.

*கிழங்குகள் சீக்கிரம் வேக, பத்து நிமிடங்கள் உப்பு கலந்த நீரில் ஊறவைத்து விட்டு வேக வைத்தால் விரைவில் வெந்து விடும்.

– ஆர்.யமுனா, காஞ்சிபுரம்.

Related Stories: