தவெக அரசை போல பயிர்க்கடன் தள்ளுபடியை இந்தியாவில் இதுவரை யாரும் அறிவித்தது இல்லை – ஓ.எஸ்.மணியன் கடும் விமர்சனம்

சென்னை: தவெக அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடியானது அனைத்து தரப்பினரும் விமர்சிக்கும்படியாக இருக்கிறது என்று அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் கூறி இருக்கிறார். சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி என்பதை அறிவிக்காமல் பணத்தை முன்னிறுத்தி கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்து உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ்.மணியன், தவெக அரசானது தனது தேர்தல் அறிக்கையில் என்ன கூறியதோ, அதை அப்படியே அல்லவா நிறைவேற்ற வேண்டும். ஆனால் விவசாய கடன் தள்ளுபடி என்ற பெயரால் தவெக அரசானது, அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்து உள்ளது. தவெக அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல உள்ளது. ஏனென்றால் இந்த அரசு அறிவித்திருப்பதை போன்ற பயிர்க்கடன் தள்ளுபடியை இந்தியாவில் யாரும் அறிவித்தது இல்லை என்று கடுமையாக விமர்சித்து உள்ளார்.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி ஒரு ஏமாற்று வேலை என்றும் தமிழக அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளும், விவசாய சங்கங்களும் எதிர்த்து வருகின்றன என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories: