ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: தற்காப்புக்காக நடத்தியதாக அறிவிப்பு

 

வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக கடந்த மாதம் அமெரிக்கா அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் தலைமையில் அமெரிக்கா, ஈரான் இடையே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.
இந்நிலையில் திடீரென ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு ஈரானில் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணிவெடிகளை புதைக்கும் படகுகள் உள்ளிட்டவை மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் சென்ட்ரல் கமாண்ட் செய்தி தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஈரானின் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க வீரர்களை பாதுகாப்பதற்கு இந்த தாக்குதல்கள் நடத்பத்பட்டது. ஆனால் தொடர்ந்து நடந்து வரும் போர் நிறுத்தத்தின்போது ராணுவம் நிதானத்தை கடைப்பிடித்து வருகின்றது” என தெரிவித்துள்ளார்.

Related Stories: