லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலில் 12 பேர் பலி

 

பெய்ரூட்: கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். லெபனான் முழுவதும் ஹிஸ்புல்லா தீவிரவாதக் குழுவை குறிவைத்து மேலும் தீவிரமான தாக்குதல்களை நடத்துவதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து லெபனானின் பெக்கா பள்ளத்தாக்குப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. தெற்கு மற்றும் கிழக்கு லெபனானின் பெரும் பகுதிகளை குறிவைத்து இரவு முழுவதும் நடத்தப்பட்ட தீவிரத் தாக்குதல்களை தொடர்ந்து ஆங்காங்கே இடிபாடுகளில் இருந்து சுமார் 12 உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: