திருச்சி, மே 19: ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் சரவணன் தலைமை வகித்து, மாவட்ட மக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.
