×

மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் காயம்

 

சேத்தியாத்தோப்பு, மே 23: சேத்தியாத்தோப்பு பேரூராட்சி சென்னிநத்தம் கிராம பகுதியை சேர்ந்த செல்லக்கண்ணு மகன் சூரியமூர்த்தி (35). மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் சேத்தியாத்தோப்பு துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சேத்தியாத்தோப்பு கிளாங்காடு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏற்பட்டிருந்த மின் பழுதினை நீக்குவதற்காக மின்கம்பத்தில் ஏறி சரி செய்தார். அப்போது அவருக்கு உதவியாக மின் ஊழியர்களும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சூரியமூர்த்தி மீது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிசிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி செய்து சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்த ஊழியருக்கு மின்சாரம் தாக்கியது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags : Sethiyathopu ,Suriyamoorthy ,Sellakannu ,Chenninatham ,Board ,Sethiyathopu… ,
× RELATED 110 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது