எபோலா வைரஸ் பரவல்: முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: காங்கோ, உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் வெப்ப பரிசோதனை உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எபோலா சிகிச்சைக்காக பிரத்யேக வார்டுகள், ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: