ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோயில் திருவிழா – 100 கிடாக்கள், 150 சேவல்களை பலியிட்டு போடப்பட்ட கறிவிருந்து.!!

மறையூர்: விருதுநகர் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் இறுதியில் சுடச்சுட வழங்கப்பட்ட அசைவ விருந்திற்காக மொத்தம் 100 கிடாக்கள், 150 சேவல்கள் பலியிடப்பட்டதாக கூறப்படுகிறது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ளது மறையூர். இங்குள்ள மாசாணம் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவை முன்னிட்டு அசைவ விருந்து கோலாகலமாக நடைபெறும். இந்த வழிபாட்டு சடங்கிலும் அதன் தொடர்ச்சியாக நடக்கும் கறிவிருந்திலும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் சிறப்பு அசைவ விருந்து நேற்று நடைபெற்றது.

இதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் அரிசி சாதம் சமைக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு சில பூஜைக்கு பின் 100 கிடாக்கள், 150 சேவல்கள் பலி கொடுக்கப்பட்டு பின்னர் அதிகாலை முதலே விருந்து நடைபெற்றது. இந்த மாபெரும் அசைவ விருந்தில் பங்கேற்க சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுல்லாது விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆண் பக்தர்கள் திரண்டனர். இந்த திருவிழாவில் சமைக்கப்படும் உணவை பெண்கள் உண்பதற்கோ அல்லது வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கோ பாரம்பரிய வழக்கப்படி அனுமதி இல்லை என்று உள்ளூர் வாசிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

 

Related Stories: