குஞ்சாலுவிளை முந்திரி தொழிற்சாலையில் ஆபத்தான புகைபோக்கி இடிக்கப்படுமா..? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அருமனை: அருமனை அருகே குஞ்சாலுவிளை பஸ் நிறுத்த பகுதியில் பல வருடங்களாக தனியார் முந்திரி தொழிற்சாலை இயங்காமல் பூட்டி கிடக்கிறது. தற்போது வரை தொழிற்சாலை பயன்பாடு இல்லாமல் உள்ளது. இந்தநிலையில் தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள புகைபோக்கி உரிய பரமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது.

நாளுக்கு நாள் புகைபோக்கி வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் அபாய சூழ்நிலை உள்ளது. தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில் அதிகளவில் வீடுகள், கடைகள் மற்றும் தனியார் கல்லூரி உள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள் பஸ் நிறுத்தத்துக்கு வந்து நிற்பார்கள். தற்போது அபாய புகைபோக்கியால் மாணவர்கள், அப்பகுதி பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர்.

எனவே அசம்பாவிதம் நிகழும் முன்பு சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகத்தினர் உடனடியாக புகைபோக்கியை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: