சென்னை: தமிழ்நாட்டில் 9 லட்சம் பேர் தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதளங்களில் முடிவுகளை அறியலாம். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8.82 லட்சம் மாணவ, மாணவியர் எழுதியிருந்தனர்.
