ஊட்டி,மே20: கடந்த மார்ச் மாதம் 7ம் தேதியன்று 14.2 கிலோ வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.60ம், மே 1ம் தேதி 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூ.998ம் அதிகரிக்கப்பட்டது. இதன்பின் கடந்த 15ம் தேதி பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 அதிரடியாக உயர்த்தினர். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை நேற்று காலை மீண்டும் உயர்த்தி எண்ெணய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தொடர் அதிர்ச்சியை அளித்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 80 காசு முதல் ரூ.1.11 வரையில் உயர்த்தியுள்ளனர். 3 நாள் இடைவெளியில் மீண்டும் பெட்ேரால், டீசல் விலையை ரூ.1 வரை ஒன்றிய பாஜ அரசு உயர்த்தியிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு நீலகிரி மாவட்ட வாகன டிரைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
