சென்னை: தஞ்சை புதுப்பட்டினத்தில் உணவகத்தில் ஏசி வெடித்து உயிரிழந்த ரவிராஜ்(27) என்பவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். படுகாயமடைந்த 4 பேருக்கு தலா ரூ.1 லட்சம், காயமடைந்த நபருக்கு ரூ.50,000 வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஏசி வெடித்து காயமடைந்த 5 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
