×

பால் குடங்களுடன் பக்தர்கள் திருவீதி உலா

 

சென்னிமலை, மே 18: சென்னிமலையில் நடைபெற உள்ள காமாட்சியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் குடங்களுடன் திருவீதி உலா சென்றனர்.
சென்னிமலையில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 13ம் தேதி மாலையில் பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது.  பொங்கல் விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேற்று காலையில் பால் குடங்களுடன் திருவீதி உலா வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். வருகிற 21ம் தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது. அன்று காலை 6 மணி முதல் திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். மேலும் அன்று மாலை 3 மணிக்கு மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து காமாட்சியம்மன் கோயிலுக்கு வருகின்றனர்.

Tags : Chennimalai ,Pongal festival ,Kamakshi Amman Temple ,Kamakshi ,Amman Temple ,
× RELATED கனமழையால் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு