பெ.நா.பாளையம், மே 15: துடியலூர் அருகே பைக் மீது மோதியதை தட்டிக்கேட்ட இருவருக்கு அடி உதைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை காளப்பட்டி பாலாஜி நகர் பகுதி ஒன்று, கிரீன் பேலஸ் அவென்யூவை சேர்ந்தவர் குருமூர்த்தி மகன் சூர்யா (21). தற்போது துடியலூர் அருகே உள்ள வடமதுரை விஎஸ்கே நகரில் தங்கி தனியார் கல்லூரியில் பி.எஸ்சி ஏஐ மற்றும் டிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 12 ம் தேதி அன்று இரவு 7 மணி அளவில், அவரது மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் வி.எஸ்.கே. நகரில் இருந்து துடியலூரில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார். வடமதுரை அருகே இருசக்கர வாகனத்தில் எதிராக வந்தவர்கள் சூரியா ஓட்டிச்சென்ற பைக் மீது மோதுவது போல வந்துள்ளார். இதனால் இது தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் எதிரே வந்த இருவரும் சூர்யா மற்றும் அவரது மாமாவையும் வண்டி சாவியை வைத்து முகத்தில் குத்தியும் அடித்தும் உதைத்ததாக கூறப்படுகிறது. அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
