மேட்டுப்பாளையம், மே 15: 2025- 2026 ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறுமுகை ஸ்ரீஅம்பாள் பப்ளிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர் முகமது உகாஷா 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி மது பிரஷிதா 476 மதிப்பெண்களை பெற்று இரண்டாம் இடமும், மாணவி வைஷாலி 471 மதிப்பெண்களை பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். மேலும், மாணவி வர்ணிகா யோகா பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த தேர்வில் 17 மாணவர்கள் 450க்கும் மேல், 25 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கும் மேல் மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி செயலாளர் கீதா பழனிசாமி, பள்ளி இயக்குனர் பிரதிக்ஷா ஆகியோர் நேற்று சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டினர். அப்போது, பள்ளி முதல்வர்கள் திருமூர்த்தி, ஏஞ்சலின் வில்லியம்ஸ் உடனிருந்தார்.
