×

எம்ஜிஆர், ஜெ. ஆத்மா எடப்பாடிக்கு தண்டனை: செங்கோட்டையன் கருத்து

கோவை: தமிழக அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: மக்கள் மீது அக்கறை இல்லாதவர்களுக்கு தான் சரிவு ஏற்படுகிறது. அவிநாசி அத்திக்கடவு திட்ட விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லாமல் தனது படத்தை வைத்து நிகழ்ச்சி நடத்தியவர் தற்பொழுது எங்கே இருக்கிறார் என நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்தாலும் ஜெயலலிதா புகைப்படத்தை பாக்கெட்டில் வைத்துள்ளேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா புகைப்படம் தேவையில்லை, எம்ஜிஆர் புகைப்படம் தேவை இல்லை என்ற எண்ணத்தில் இருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆத்மா எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : MGR ,J. ,Atma Edappadi ,Sengottaiyan ,Coimbatore ,Tamil Nadu ,Minister ,Coimbatore airport ,Jayalalithaa ,Avinashi Athikadavu project festival ,
× RELATED தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரின்...