×

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பிற்கு இணையாக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணி உருவாக்கம்

இஸ்லாமாபாத்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் உலக அரசியலில் ஒரு புதிய வலிமையான கூட்டணி உருவாக தொடங்கியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ (Nato) அமைப்பிற்கு இணையாக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து இஸ்லாமிய நேட்டோ (Islamic NATO) என்ற புதிய கூட்டணி உருவாக்கி வருகின்றன.

ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது இந்த வரிசையில் துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் தயாராகி வருகின்றன. இந்த நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கூட்டணி பலத்தை பொறுத்தவரை சவூதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் தங்களின் பண பலத்தை வழங்குகின்றன.

துருக்கி நாடு தனது நவீன ராணுவ தொழில் நுட்பத்தையும் குறிப்பாக ட்ரோன் தயாரிப்பு திறனையும் கொண்டு வருகிறது. பாகிஸ்தான் தனது அணு ஆயுத பலத்தையும் ஏவுகணை தொழில் நுட்பத்தையும் இந்த கூட்டணியின் முக்கிய அங்கமாக மாற்றியுள்ளது. இந்த கூட்டணியின் மிக முக்கியமான விதியாக கருதபடுவது கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தமாகும்.

அதாவது இந்த அமைப்பில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது ஒட்டுமொத்த கூட்டணியின் மீதான தாக்குதலாக கருதப்பட்டு நான்கு நாடுகளும் பதிலடி கொடுக்கும். குறிப்பாக ஏற்கனவே நேட்டோ அமைப்பில் இரண்டாவது பெரிய ராணுவத்தை கொண்டுள்ள துருக்கி இந்த கூட்டணியில் இணைவது அமெரிக்காவிற்கு சவாலாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2025 மே மாதம் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) நிகழ்வின்போது பாகிஸ்தானுக்கு துருக்கி உதவியது குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கு குறைந்து வருவதால் தங்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி கொள்ள இந்த நாடுகள் முற்படுகின்றன.

இருப்பினும், இந்த நகர்வு இந்தியாவின் பாதுகாப்பு சூழலில் சில தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என விமான படையின் முன்னாள் விமானப்படைத் தளபதி அனில் சோப்ரா (Air Marshal Anil Chopra) கவலை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் அணு ஆயுத பலமும் துருக்கி நவீன தொழில்நுட்பமும் இணைவது இந்தியாவிற்கு ஒரு மறைமுகமான சவாலாக அமையலாம்.

இதனை எதிர்கொள்ள இந்திய தற்போது கிரீஸ், இஸ்ரேல் மற்றும் சைப்ரஸ் (Greece, Israel, Cyprus) ஆகிய நாடுகளுடன் தனது உறவை வலுப்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு ஏந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல என்றும் பிராந்திய அமைதியை நிலைநாட்டவே உருவாக்கபடுவதாகவும் இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புதுறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

 

 

 

Tags : Islamic ,US ,NATO ,ISLAMABAD ,MIDDLE EAST REGION ,U.S. ,Islamic NATO ,
× RELATED லாட்வியா பிரதமர் ராஜினாமா