கரூர் ஆத்தூர் வழியாக செல்லும் மங்காசோழிபாளையம் சாலையை சீரமைக்க வேண்டும்

கரூர், மே 14: கரூர் ஆத்தூர் வழியாக மங்காசோழிபாளையம் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகர பகுதியில் இருந்து ஆத்துார் கோதுார் வழியாக மாங்காசோழிபாளையம் செல்லும் நீண்ட சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்த சாலை பல ஆண்டுகளாக தார்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை தரம் உயர்த்த வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே, அதிகளவு வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையை பார்வையிட்டு இதனை தரம் உயர்த்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: