×

மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு பேச்சு தவெக அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு கோரினார்

 

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்ததாக எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தவெக அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு கோரியுள்ளார். என்னுடைய வார்த்தைகள் யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் மனமார்ந்த வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், இந்த மன்னிப்பு பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் கோபத்தை தணிக்க போதுமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அறியாமல் செய்த தவறு என்று அமைச்சர் கூறினாலும், பதவியில் இருப்பவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதிக பொறுப்புணர்வு தேவை என விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் உணர்வுகளை உண்மையாக புரிந்துகொண்டு அமைச்சர் கீர்த்தனா செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags : Minister ,Keerthana ,Chennai ,
× RELATED கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி: எண்ணூரில் பரிதாபம்