- துணை பேச்சாளர்
- திருச்சி
- தவேகா எம்.எல்.ஏ.
- ஜேசிடி பிரபாகர்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- தவெகா
- சட்டமன்ற உறுப்பினர்
- ரவிசங்கர்
- துறையூர் (தனி)
- திருச்சி மாவட்டம்
- சபாநாயகர்
திருச்சி: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகராக தவெக எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் தேர்வு செய்யப்பட்டார். அவரைத்தொடர்ந்து, திருச்சி மாவட்டம் துறையூர் (தனி) தொகுதி தவெக எம்எல்ஏ ரவிசங்கர் துணை சபாநாயகராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ரவிசங்கருக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்ட மகிழ்ச்சியில் இருந்த அவரது ஆதரவாளர்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலான புகைப்படம் பேரிடியாக அமைந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மதுபான பாரில், துணை சபாநாயகர் ரவிசங்கர் போதையில் டேபிளில் அமர்ந்து இருப்பதும், அந்த டேபிளில் மது அருந்திய காலி மதுபாட்டில்கள், வாட்டர் கேன் இருப்பது போன்ற புகைப்படம் வாட்ஸ் அப், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் குறித்து ரவிசங்கர் தரப்பிலோ அல்லது தவெக தரப்பிலோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
துணை சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து நண்பர்கள் ‘அட்ராசிட்டி’: ‘இப்போ எங்க கன்ட்ரோல்’
என்று வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ்
துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு, சட்டப்பேரவை வளாகத்தில் பிரத்யேக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரவிசங்கரின் நண்பர்களான பார்த்திபன், செந்தில் மற்றும் முரளி ஆகியோர், துணை சபாநாயகருக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றுள்ளனர். அங்கு சட்டப்பேரவை விதிகளையும், மாண்பையும் மறந்து, துணை சபாநாயகர் அமர வேண்டிய அதிகாரப்பூர்வ நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். அத்துடன் நிறுத்தாமல், அந்த புகைப்படத்தை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டு, அதன் கீழே துணை சபாநாயகர் இருக்கை.
இப்போ எங்க கன்ட்ரோல் (Deputy Speaker chair… now in our control) என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ‘மக்களாட்சியின் தத்துவமாக விளங்கும் சட்ட பேரவை இருக்கைகளை தனிநபர்கள் தங்களது பொழுதுபோக்கு இடமாக மாற்றியது கண்டிக்கத்தக்கது’ என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
