தமிழக சட்டமன்ற சபாநாயகராக பொறுப்பேற்றார் ஜே.சி.டி.பிரபாகர்

சென்னை: தமிழக சட்டமன்ற சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஜே.சி.டி.பிரபாகர் தமிழக சட்டமன்ற சபாநாயகராக பொறுப்பேற்று கொண்டார். துணை சபாநாயகராக ரவிசங்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

சட்டப்பேரவை மரபுப்படி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும், செங்கோட்டையனும் இணைந்து ஜே.சி.டி.பிரபாகரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். இதனை தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமச்சந்திரன், சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று கோரினார்.

விசிக சட்டமன்ற உறுப்பினரான வன்னிஅரசு பேசுகையில், 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட அறிவிப்பை வரவேற்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய தமிமுன் அன்சாரி சிறிய, பெரிய கட்சிகள் என பேதம் பார்க்காமல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களை எடுத்துரைக்க வாய்ப்பளிக்க கேட்டு கொண்டார். மேலும் சபாநாயகர் நாகரிக அரசியலின் வெளிச்சத்தை கொடுக்க வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கூறினார்.

தொடர்ந்து பேசிய பாமக-வை சேர்ந்த சவுமியா அன்புமணி, ஜனநாயக முறைப்படி சட்டமன்றத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.

Related Stories: