×

வெற்றி சான்றிதழை கொண்டு வராததால் அமைச்சர் கீர்த்தனா எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கவில்லை..!!

சென்னை: தவெக அரசில் நேற்று அமைச்சராக பொறுப்பேற்று கொண்ட கீர்த்தனா, எம்.எல்.ஏ. ஆக தேர்வான சான்றிதழை எடுத்து வராததால் சட்டப் பேரவையில் உறுப்பினராக பதவியேற்கவில்லை.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை பிடித்த தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று பதவியேற்றார். அவருடன் ஒன்பது அமைச்சர்களும் பதவியேற்றனர். தற்காலிக சபாநாயகராக, சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ., கருப்பையா தேர்வு செய்யப்பட்டார். கருப்பையாவுக்கு கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும், தற்காலிக சபாநாயகர் கருப்பையா, பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சராக பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்றார். தொடர்ந்து ஒவ்வொரு எம்எல்ஏக்களாக பதவியேற்று கொண்டனர். இந்தநிலையில், தவெக அரசின் அமைச்சர் கீர்த்தனா, எம்.எல்.ஏ. ஆக தேர்வான வெற்றி சான்றிதழை எடுத்து வராததால் சட்டப் பேரவையில் உறுப்பினராக பதவியேற்கவில்லை. இதனால், பிற அமைச்சர்களுடன் அவர் உறுப்பினராக பதவியேற்க முடியாமல் போனது. சான்றிதழை கொடுத்த பிறகு பதவியேற்றுக் கொள்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Minister ,Kirtana M. L. A. ,Chennai ,Kirtana, M.D. ,Government of Taweka ,L. A. ,Legislative Council ,Tamil Nadu Victory Corporation ,Tamil Nadu Assembly ,
× RELATED முதல்வர் விஜய் சென்னை பெரம்பூர்...