×

பெரும்பான்மை இல்லாமலேயே ஏன் முதல்வராக துடிக்கிறார் விஜய்.!! எம்எல்ஏ காமராஜ் கேள்வி…

சென்னை: அமமுக எம்எல்ஏ-வான காமராஜ், தனது கட்சியின் பொதுச்செயலாளர் தினகரனுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய எம்எல்ஏ காமராஜ், பெரும்பான்மைக்கு எவ்வளவு சீட் வேண்டும் என்று விஜய்க்கு தெரியுமல்லவா, அது தெரிந்தும் 108 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே வைத்து கொண்டு ஆட்சியமைக்க விஜய் ஏன் முயற்சி செய்கிறார்.!

பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஏன் முதல்வராக துடிக்கிறார் விஜய் என்று காமராஜ் கேள்வி எழுப்பி உள்ளார். அரசியலமைப்பு என்ன சொல்கிறது, மெஜாரிட்டி இருந்தால் ஆட்சியமைக்கலாம் என்று தெளிவாக தானே சொல்கிறது. அதன் பின்னும் எப்படி பல கூட்டணிகளில் இருக்கும் கட்சிகளிடம் ஆதரவு கேட்கிறார்?

அதிலும் தீயசக்தி திமுக என்று விமர்சித்து விட்டு எப்படி அந்த கூட்டணியில் இருக்கும் கட்சிகளிடம் ஆதரவு கேட்கிறார், அடுத்த கூட்டணியில் வெற்றி பெற்றவர்களிடம் ஏன் தொடர்ந்து ஆதரவு கேட்கிறார். நான் தவெக-விற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டதாக கூறப்படும் வீடியோ போலியானது மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்டது என்பதை நிரூபிப்போம் என்றும் காமராஜ் கூறி இருக்கிறார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி விட்டு முதல்வராவதற்கே ஊழல் செய்கிறது தவெக என்று சாடியுள்ளார்.

 

Tags : Vijay ,MLA ,Kamaraj ,Chennai ,Kamraj ,Ammuka MLA ,general secretary ,Dinakaran ,
× RELATED பிரச்சனை என்றால் உங்களை மாதிரி ஓடி...