×

போக்சோ குற்றத்தில் சிக்கிய உத்தரகாண்ட் சாமியார் வழக்கில் நீதிபதி விலகல்

பிரயாக்ராஜ்: உத்தரகாண்ட்டில் உள்ள ஜோதிர்மட சங்கராச்சாரியாராக இருப்பவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா. இவர் தனது மைனர் சீடர்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, உத்தரப்பிரதேச பிரயாக்ராஜ் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கடந்த மார்ச் 25ம் தேதி சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தாவுக்கு ஜாமீன் வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. ஆனால் அந்த நிபந்தனைகளை மீறி பல கூட்டங்களை அவர் நடத்தியதாகவும் வழக்கு தொடர்பாக பல கருத்துக்களை தெரிவித்ததாகவும் குற்றம்சாட்டி அசுதோஷ் பிரம்மச்சாரி மகராஜ் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்த மனு நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனக் கூறி வேறு அமர்வுக்கு வழக்கை மாற்ற தலைமை நீதிபதியை கேட்டுக் கொள்வதாக விலகினார்.

Tags : Uttarakhand ,Swami Avimukteshwarananda ,Shankaracharya ,Jyotirmad ,Uttar ,Pradesh Prayagraj ,POCSO ,
× RELATED பாகிஸ்தானில் இருந்து வரும்...