கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நகரின் ஷ்யாம் நகர் பகுதியில் பிப்ரவரி 16ம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்களால் இரண்டு பணப்பெட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 6 பேரை கைது செய்தனர். இந்த விசாரணையின்போது ஜஜ்மாவை சேர்ந்த பழைய இரும்பு மற்றும் இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மெஹ்பூஸ் அலியுடன் தொடர்புடைய வலையமைப்பை காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
கொள்ளை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அலியின் சார்பாக ஹவாலா பணத்தை கொண்டு சென்றதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்து போலீசாரால் மெஹ்பூஸ் அலி என்ற பப்பு கரி கைது செய்யப்பட்டார். இவர் ரூ.3200கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போலி நிறுவனங்கள், போலியான ஆவணங்கள், ஹாவலா பரிவர்த்தனை வலையமைப்பில் செயல்பட்ட முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
