×

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

 

கோவை, மே 8: வணிக சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கோவையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக, கோவையில் பல ஓட்டல்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சில உணவகங்கள் சில வாரங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், பல்வேறு கட்சிகள் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கு இந்திய கம்யூ., மாநில பொருளாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவசாமி, மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் பத்மநாபன், கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அவர்கள், ஒன்றிய அரசு சிலிண்டர் உயர்வை திரும்ப பெற வேண்டும், கள்ளச்சந்தையில் விற்பதை தடுத்து நிறுத்த வேண்டும், தட்டுப்பாடு இல்லாமல் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் ரயில்வேயில் 29 ஆயிரம் பணியிடங்களை ரத்து செய்திருப்பதை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Communist ,Coimbatore ,
× RELATED போதையில் நண்பரை கல்லால் தாக்கிய தொழிலாளி கைது