×

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகம் வினியோகம்

 

 

செங்கல்பட்டு, மே 8: 2026-2027ம் கல்வி ஆண்டுக்கான விலையில்லா நோட்டு புத்தகங்கள், பாட புத்தகங்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 65 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 81 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 20 உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், 21 உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 187 பள்ளிகளுக்கு
மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 85 பள்ளிகளுக்கு விலையில்லா நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். இப்பபணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவருட்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Chengalpattu ,
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பரிதாப பலி