×

தேசிய கால்பந்து போட்டியில் காஞ்சிபுரம் மாணவர்கள் அசத்தல்

 

காஞ்சிபுரம் மே 7: காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா ஆடவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வெற்றிப்பெற்ற கோல்டன் ஏரா புட்பால் கிளப் கால்பந்து அணி மாணவர்கள் கிளின்டன் தேவகுமரன் அமரேஷ், சுந்தர், ஆகாஷ், சஞ்சய் கண்ணன், சண்முகவேல், மனோஜ், உதயா, தொல்காப்பியன், கேசவ், காவ்ய மித்ரன் ஆகியோர் தேர்வாகி 14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். 11வது நைன்-ஏ-சைடு தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள சாம்பியன் பள்ளியில் 3 நாட்கள் நடை
பெற்றது.
இப்போட்டியில் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், டெல்லி, ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு, பீகார், அசாம், கர்நாடகா, அரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்த தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு அணி, இறுதிப்போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடத்தை (ரன்னர்-அப்) பிடித்
துள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதற்கான நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில செயலாளர் யோஷ்வா டேனியல் கலந்து
கொண்டு மாணவர்களை பாராட்டி பேசினார்.

Tags : Kanchipuram ,football ,Golden Era Football Club ,Arignar Anna Boys' Higher Secondary School ,Clinton Devakumaran Amaresh ,Sundar ,Akash ,Sanjay Kannan ,Shanmugavel ,Manoj ,Udaya ,
× RELATED மதுபோதை தகராறில் விபரீதம் தலையில்...