இந்தியா – வியட்நாம் இடையே இருந்த நட்பு புதிய உயரத்தை எட்டியது

டெல்லி: வியட்நாம் அதிபர் டோ லாம்மின் இந்திய வருகையையொட்டி இரு நாடுகளும் தங்களது நட்பை இன்னும் வலுவான நிலைமைக்கு எடுத்து சென்றுள்ளனர். தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியா முதல் முதலில் 2007 ஆம் ஆண்டு வியட்நாம் உடன்தான் முக்கியமான கூட்டு ஒப்பந்தத்தை தொடங்கியது.

பின்னர் 2016ல் இன்னும் விரிவான ஒன்றாக வளர்ந்தது. தற்போது இந்த பயணம் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கான இடையிலான வர்த்தகம் 2 மடங்காக அதிகரித்து தற்போது 16 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இந்த வர்த்தகத்தை வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 25 மில்லியன் டாலராக உயர்த்துவதே இந்த புதிய ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

இதன் ஒரு பகுதியாக வங்கி, கல்வி, தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், கலாச்சாரம் மற்றும் பழங்கால ஏட்டுச்சுவடிகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மொத்தம் 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. விவசாய துறை பொறுத்தவரை இந்தியாவின் திராட்ச்சை மற்றும் மாதுளை பழங்கள் வியட்நாமிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

வியட்நாமின் புகழ் பெற்ற துரியன் மற்றும் பொமலோ பழங்கள் இனி இந்திய சந்தைக்கு வர உள்ளன. இதைத்தவிர இந்திய மருத்துவ நிறுவங்கள் வியட்நாம் சந்தையில் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான வழிமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக மிக பெரிய மாற்றமாக இந்தியாவின் யுபிஐ பணம் பரிவர்த்தனை முறை மற்றும் வியட்நாமின் அதிவேக பணம் பரிவர்த்தனை அமைப்பை இணைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இது சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்கள் பெரும் உதவியாக இருக்கும். மேலும் எரிசக்தி பாதுகாப்புக்கு தேவையான அரிய வகை தாதுக்கள் மற்றும் நகர்ப்புற மேலாண்மை ஆகிய துறைகளிலும் இணைத்து செயல் பட இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு என்பது இந்த உறவின் மிக முக்கியமான தூணாகும். இரு நாடுகளும் இணைந்து ராணுவ தளவாடங்களை தயாரிப்பதற்கும் கூட்டு பயிற்சிகளை அதிகரிப்பதற்கும் கப்பல் மற்றும் விமானங்களின் வருகையை மேன்படுத்தவும் ஒப்பு கொண்டுள்ளன. குறிப்பாக தென் சீன கடல் விவகாரத்தில் சர்வதேச சட்டங்களை பின்பற்றி அமைதியான முறையில் சர்ச்சைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்றும் கடல் வழி பயண சுகந்திரம் உறுதி செய்ய பட வேண்டும் என்றும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

இந்தியா ஆசிய வர்த்தக ஒப்பந்தமான AITIGA இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப்படும் என்றும் இது ஆசியா நாடுகளுடனான பொருளாதார பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் எதிர்பக்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் மேலாக மாநிலங்களுக்கு இடையேயான நேரடி ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த சந்திப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

Related Stories: